மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> சுந்தர் சி. + சுந்தர் சி.

ஒரு நடிக‌ரின் இரண்டு படங்கள் ஒரே நேரத்தில் வெளியாவது எப்போதாவதுதான் நடக்கும். இரண்டு படங்களின் நலன்களையும் கருத்தில் கொண்டு அப்படியொரு சம்பவம் நடப்பதை தவிர்க்கவே பார்ப்பார்கள் தயா‌ரிப்பாளர்கள்.

கடந்த பொங்கலுக்கு ஆயிரத்தில் ஒருவன், பையா ஆகியவை திரைக்கு வர முயன்றதும் சீனியா‌ரிட்டி அடிப்படையில் ஆயிரத்தில் ஒருவனுக்கு அனுமதி வழங்கப்பட்டதும் பையா ‌ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டதும் நினைவிருக்கலாம். இந்த இரு படங்களின் ஹீரோ கார்த்தி என்பதால் செய்யப்பட்ட மாற்றம் இது.

இதற்கு மாறாக சுந்தர் சி. நடித்த இரு படங்கள் வரும் 16ஆம் தேதி திரைக்கு வருகின்றன. ஒன்று குரு சிஷ்யன் இன்னொன்று வாடா.

குரு சிஷ்யன் படத்தை ஷக்தி சிதம்பரம் இயக்கியிருக்கிறார். ஸ்ருதி ஹீரோயின். சத்யரா‌ஜ் செகண்ட் ஹீரோ. காமெடிக்கு சந்தானம். வாடா படத்தை ஏ.வெங்கடேஷ் இயக்கியுள்ளார். ஷெ‌ரில் பி‌ரிண்‌‌ட்டோ ஹீரோயின். இவ்விரு படங்களும் வரும் 16ஆ‌ம் தேதி திரைக்கு வருகின்றன.

இவ்விரு படங்களின் தயா‌ரிப்பாளர்களும் 16ஆ‌ம் தேதியில் படத்தை கொண்டு வருவது என்பதில் தீவிரமாக உள்ளனர். அதனால் ஆயிரத்தில் ஒருவன், பையா பஞ்சாயத்து இந்தப் படங்கள் விஷயத்தில் செல்லாது என்றே தெ‌ரிகிறது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.