மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> பப்ளிசிட்டிக்காக விளம்பர வழக்கு

சினிமாவுக்கு சிக்கல் எங்கிருந்தெல்லாம் வரும் என்று யாரும் சொல்ல முடியாது. ஏ.வெங்கடேஷ் இயக்கி, அருண் விஜய் நடிக்க, அவரின் மாமனார் தயாரிக்கும் படம் மாஞ்சா வேலு. 21ஆம் தேதி வெளியிட விளம்பரம் செய்திருந்த நிலையில், படத்துக்கு இடைக்காலத் தடை விதித்திருக்கிறது நீதிமன்றம்.

துணிச்சல் என்ற படத்தை தயாரித்த காளிதாஸ் என்பவர் தனது படத்துக்கு சரியான ஒத்துழைப்பு வழங்காததால் துணிச்சல் படம் நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டது. அதற்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றிருக்கிறார்.

சினிமாவில் பப்ளிசிட்டிக்காகக் கூட இப்படிப்பட்ட வழக்குகளை படத்தின் தயாரிப்பாளர்களே கிளப்பிவிடுவார்கள். அந்த வகையில், ஏகப்பட்ட படங்களின் வருகையால் மாஞ்சா வேலு தனித்து தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் இப்படியொரு வழக்கு என்ற பேசிக் கொள்கிறார்கள். இதற்குமுன் இப்படிப்பட்ட வழக்குகளைப் போட்ட சில தயாரிப்பாளர்கள். பார்ப்போம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.