சில வருடங்களாக நடிக்க மட்டுமே செய்து வந்த சுந்தர்.சி. தற்போது மீண்டும் படம் இயக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார். ‘தலைநகரம்’ தான் இவர் ஹீரோவான முதல் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு சற்று மங்கும் நிலையில் இருப்பதால் மீண்டும் இயக்குனராகத் திட்டமிட்டு ‘தலைநகரம்’ படத்தின் இரண்டாம் பாகமாக, ‘நகரம் மறுபக்கம்’ என்று தலைப்பிட்டு பணிகளை ஆரம்பித்து விட்டார்.
தலைநகரத்தின் வெற்றிக்கு வடிவேலுவின் பங்கு நிறைய இருந்தது என்பதால்... இரண்டாம் பாகத்திலும் அவரை நடிக்க வைக்க தூது அனுப்பியுள்ளார் சுந்தர்.சி.
‘குரு சிஷ்யன்’ படத்தில் முதலில் நடிப்பதாக இருந்த வடிவேலு, நடிக்கவில்லை. அதற்குக் காரணம் சுந்தர்.சி.தான் என யாரோ வடிவேலுவிடம் போட்டுக் கொடுத்து விட்டார்களாம். அதனால் சமாதான முயற்சி நடைபெறுகிறது.
ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு சற்று மங்கும் நிலையில் இருப்பதால் மீண்டும் இயக்குனராகத் திட்டமிட்டு ‘தலைநகரம்’ படத்தின் இரண்டாம் பாகமாக, ‘நகரம் மறுபக்கம்’ என்று தலைப்பிட்டு பணிகளை ஆரம்பித்து விட்டார்.
தலைநகரத்தின் வெற்றிக்கு வடிவேலுவின் பங்கு நிறைய இருந்தது என்பதால்... இரண்டாம் பாகத்திலும் அவரை நடிக்க வைக்க தூது அனுப்பியுள்ளார் சுந்தர்.சி.
‘குரு சிஷ்யன்’ படத்தில் முதலில் நடிப்பதாக இருந்த வடிவேலு, நடிக்கவில்லை. அதற்குக் காரணம் சுந்தர்.சி.தான் என யாரோ வடிவேலுவிடம் போட்டுக் கொடுத்து விட்டார்களாம். அதனால் சமாதான முயற்சி நடைபெறுகிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.