மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> வாய்ப்புகள் ! விடாமல் துரத்துகிறது.

இயக்கப் ஒப்புக்கொண்ட படம் வரைக்கும் இயக்கி முடித்துவிட்டு டென்ஷனே இல்லாமல் நடிப்பது மட்டுமே போது‌ம் எ‌ன்ற யோசனை‌யி‌ல் இரு‌க்‌கிறார் இயக்குனர் ஏ.வெங்கடேஷ். காரணம் ஏகப்பட்ட படங்கள் இயக்கியதில் கிடைக்காத புகழ் ‘அங்காடித் தெரு’வில் கிடைத்ததாக நெகிழ்கிறார்.

அதோடு அவரின் மனைவி மற்றும் சொந்தங்களும் நடிப்பதைத்தான் விரும்புகிறார்கள். நடிப்பில் ‘அங்காடி‌த் தெரு’தான் முதலும் கடைசியும் என்றார். ஆனால், பாராட்டி வரும் நிறைய போன் கால்களால் மனம் மாறியிருக்கிறார்.

தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் ‘வல்லக்கோட்டை’, இதையடுத்து அருண் விஜய் நடிக்கும் படம் ‘காவல்துறை’. இது, ‘மலை மலை’, ‘மாஞ்சா வேலு’ படத்தை தயாரித்த அதே நிறுவனம் தயாரிக்கும் படம். இவ்விரண்டையும் இயக்கி முடித்த பிறகு முழுநேர நடிகராக மாற இருக்கிறார்.

தனது நண்பர்களான பாலாஜி சக்திவேல், வசந்தபாலன், அமீர், சசி போன்றவர்களும் தங்களின் படங்களில் நடிக்க அழைப்பு விடுத்திருக்கிறார்களாம். ஒரு தடவை சாயத்தை பூசிட்டா விடாதுங்கறது உண்மைதானோ!
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.