
விஜய் படங்களால் பல கோடி நஷ்டம், விஜய் நஷ்டஈடு தந்தாக வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் கொளுத்திப் போட்ட திரி இன்னும் புகைந்து கொண்டுதான் இருக்கிறது. இதனை அணைக்க நடிகர் சங்கத்தில் பரஸ்பர மீட்டிங் ஒன்றிற்கு சங்கத் தலைவர் சரத்குமார் ஏற்பாடு செய்திருந்தார்.
விஜய் சார்பில் அவரும் அவரது தந்தையும் கலந்து கொண்டனர். திரையரங்கு உரிமையாளர்கள் பன்னீர்செல்வம் தலைமையில் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும், திரையரங்கு உரிமையாளர்களுக்கு சாதகமாக விஜய் விட்டுக் கொடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிப்பை திரையரங்க உரிமையாளர்களிடமிருந்து எதிர்பார்க்கலாம்.
உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
மேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.