Sunday, July 11, 2010

> சமீராவின் முக்கிய சவால் வேடம்

தென்னிந்திய இயக்குனர்களின் ப்‌ரியத்துக்கு‌ரிய நடிகையாகிவிட்டார் சமீரா ரெட்டி. முக்கியமாக நம்மூர் கௌதம் வாசுதேவ மேனன்.

வாரணம் ஆயிரம் படத்தைத் தொடர்ந்து கௌதமின் புதிய த்‌ரில்லர் திரைப்படத்திலும் இவர்தான் ஹீரோயின். இந்தப் படத்தில் பாடல்கள், பின்னணி இசை எதுவும் இல்லை என்கின்றன தகவல்கள்.

காதல் எப்படி இருக்கும் என்று தனது படங்களில் சொன்ன கௌதம் இந்தப் படத்தில் காதல் எப்படி இருக்கக் கூடாது என்பதை சொல்லியிருக்கிறாராம்.

தமிழ், மலையாளத்தில் நடித்தபடி இந்தியில் ரெட் அலர்ட் படத்திலும் நடித்து முடித்துள்ளார் சமீரா. இந்தப் படத்தில் இவருக்கு நக்சலைட் வேடம். இந்தியாவின் முதன்மையான பிரச்சனையை பற்றிய படம் என்பதால் பெயரும் புகழும் தாராளமாக கிடைக்கும் என நம்புகிறார் சமீரா.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.