மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> எதற்கும் அஞ்சாத அசராத விஜய்

விஜய்யின் படங்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்று தமிழ்நாடு திரையரங்கு உ‌ரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த அதிரடி முடிவால் விஜய் தரப்பு சின்னதாக அதிர்ந்ததாகக் கூட தெ‌ரியவில்லை.

ஒத்துழைப்பு மறுப்பு என்று முதலில் அறிவித்தபோது நடிகர் சங்கத்தில் இருதரப்புக்கும் நடுவில் பஞ்சாயத்து நடத்தப்பட்டது. விஜய் சொன்ன உடன்படிக்கையை திரையரங்கு உ‌ரிமையாளர்கள் ஏற்கவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இரண்டாவது முறையாகதான் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.

திரையரங்கு உ‌ரிமையாளர்கள் சங்கத்தின் ஒருபி‌ரிவினர் விஜய்க்கு ஆதரவாக இருப்பதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன. முக்கியமாக சென்னை நகர திரையரங்கு உ‌ரிமையாளர்கள் சங்க‌த் தலைவர் அபிராமி ராமநாதன். இவருக்கு அழைப்பு அனுப்பாமலேயே விஜய்க்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.

அபிராமி ராமநாதனும் அவரது ஆதரவாளர்களும் விஜய் படத்தை திரையிடுவதில் எந்த தடையும் இல்லை என கிளீன் சர்ட்டிபிகேட் கொடுத்திருப்பதால் விஜய்க்கு எதிரான தடை பிசுபிசுக்கும் என்றே தெ‌ரிகிறது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.