மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> தாணு ,சீமான் திடீர் சந்திப்பு

ஜெயில் சந்திப்பு என்றுதான் சொல்லியிருக்க வேண்டும். வேலூர் ஜெயிலில் இருக்கும் சீமானை சென்று சந்தித்திருக்கிறார் தாணு.

விஜய்யை வைத்து சீமான் இயக்கவிருக்கும் பகலவன் படத்தை தாணு தயா‌ரிக்கிறார். கதை விவாதம் முடிந்து விஜய்யிடம் கதை சொல்லி, கால்ஷீட்டும் உறுதி செய்து வைத்திருந்தார் சீமான். இந்நிலையில்தான் தமிழர்களுக்காக குரல் கொடுத்ததற்காக அவரை தமிழக அரசு சிறையில் அடைத்திருக்கிறது.

இந்த இடைவெளியில் விக்ரம் கே.குமார், லிங்குசாமி என பலர் விஜய்யிடம் கதை சொல்லியுள்ளனர். இதில் விக்ரம் கே.குமார் இயக்கத்தில் அவர் நடிப்பது ஏறக்குறைய முடிவாகிவிட்டது. இந்த லிஸ்ட் இன்னும் நீளாமல் இருப்பதற்காகவும், அடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து முடிவு செய்யவும் தாணு சீமானை சந்தித்ததாக கூறப்படுகிறது.

சீமானின் ‌ரிலீஸுக்காக திரையுலகம் மட்டுமல்ல உலக‌த் தமிழினமே காத்திருக்கிறது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

1 நான் சம்பாதிச்சது:

  1. விஐய் இனியும் எதற்காக நடிக்கிறார்.அவர் பழைய நடிப்பை எப்போது தருவார்.அப்போது தான்.........????

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.