மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> எந்திரனில் பல சிக்கல் - தாமதமாகுமா???

செப்டம்பர் மூன்றாம் தேதி வெளியாகும் என எதிர்பார்ககப்பட்ட எந்திரன் செப்டம்பர் இறுதிக்கு‌த் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஐஸ்வர்யாராயே காரணம் என்கின்றன சில தகவல்கள்.

எந்திரனின் இந்தி மற்றும் தெலுங்கு பதிப்புகளை ஒரே நேரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்திப் பதிப்புக்கு இதுவரை ஐஸ்வர்யாராய் டப்பிங் பேசவில்லை என தெ‌ரிகிறது. ஊடல்நலக் குறைவு காரணமாக அவரால் சென்னை வந்து டப்பிங் பேச முடியவில்லை என மும்பையிலிருந்து வரும் தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன.

ஹைதராபாத்தில் நடந்த எந்திரன் ஆடியோ வெளியீட்டு விழாவிலும் ஐஸ்வர்யாராய் கலந்து கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக அவர் பேசிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது. உடல்நலக் குறைவு காரணமாக தன்னால் விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை என அப்போது அவர் தெ‌ரிவித்தார்.

ஐஸ்வர்யாராய் டப்பிங் பேசினால் எந்திரன் ‌ரிலீசுக்கு தயாராகிவிடும் என்கிறார்கள்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.