மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> பயிற்சியாளராக விருப்பம் - கங்குலி.

இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக விரும்புவதாக, முன்னாள் கேப்டன் கங்குலி விருப்பம் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர்,

கடந்த 15 ஆண்டுகளாக சர்வதேவ கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொண்ட நான், ஏராளமான அனுபவத்தை சேர்த்து வைத்துள்ளேன். கொல்கத்தாவில் கிரிக்கெட் அகாடமி ஒன்றை துவக்கி, இளம் வீரர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளேன்.

இதற்கான ஆரம்பகால பணிகளை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக செயல்பட விரும்பமாக உள்ளது. டோனியில் தலைமையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

டெல்லி வருவதற்கு முன்னரே மைதானத்தில் மேற்கூரை இடிந்து விழுவது மற்றும் காமன்வெல்த் கிராமத்தில் எங்கும் சுகாதாரக்கேடு நிலவுவது போன்ற காட்சிகளை பார்த்தேன். நான் ஒன்றை மட்டும் கூறிக் கொள்கிறேன். இந்தியா எவ்வளவு பெரிய பேரிழப்பில் இருந்தும் மீண்டுவரக்கூடியது திறன் உடையது. அதனால் காமன்வெல்த் போட்டிகள் மிகப்பெரிய வெற்றி பெறும் என்பதில் ஐயமில்லை என்றார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.