மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> கள்ளக் காதலர் நடவடிக்கை எடுக்காவிடில் நயன்தாரா நடிப்பது உறுதி.

செய்திகளின் அட்சய பாத்திரமாக இருக்கிறார் நயன்தாரா. இந்த விஷயத்தில் அவர் எப்போதோ சிம்ரனை ஓவர்டேக் செய்துவிட்டார்.

நயன்தாரா பாஸ் என்கிற பாஸ்கரனுக்குப் பிறகு எந்தப் படத்திலும் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை என்பது ரேஷனுக்கு கியூவில் நிற்கும் தமிழகத்தின் சராச‌ரி ஜனங்களுக்கும் தெ‌ரியும். நயன்தாரா புதுப் படங்களை ஒப்புக் கொள்வதாக இல்லை என்றுதான் இதுவரை சொல்லி வந்தார் அவரது மேனேஜர்.

ஆனால் அதில் இப்போது பெருத்த மாற்றம். நயன்தாரா நல்ல கதை அமைந்தால் நடிக்க‌த் தயாராக இருப்பதாக ஸ்லோகனை மாற்றி சொல்ல ஆரம்பித்திருக்கிறார். நேற்று இல்லாத இந்த மாற்றத்துக்கு என்ன காரணம்?

நயன்தாரா ரகசியமாக காதலித்து வரும் தனது கள்ளக் காதலனுக்கு - இந்த வார்த்தைப் பிரயோகம் நம்முடையதல்ல, பெரும் பத்தி‌ரிகைகள் மனைவி இருப்பவருடன் தொடர்பு வைத்திருப்பவர்களை இந்த அடைமொழியில்தான் குறிப்பிட்டு வருகின்றன - நெருக்கடியை கொடுக்கும் பொருட்டே மீண்டும் நடிப்பதாக அறிவித்திருப்பதாக கூறுகிறார்கள்.

கள்ளக் காதலர் விரைந்து நடவடிக்கை எடுக்காவிடில் நயன்தாரா நடிப்பது உறுதி என்கிறார்கள்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.