மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> அதிர்ச்சியில் நயன்தாரா.

நயன்தாரா விரைவில் பிரபுதேவாவை மணமுடிக்க உள்ளார். பிரபுதேவாவின் இரண்டாவது திருமணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் நடக்கயிருக்கும் இந்த திருமணத்தையொட்டி பல்வேறு விதமான வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. ஆந்திர பத்திரிகையொன்று அதிரடியே செய்துள்ளது. திருமணத்துக்குப் பிறகு நயன்தாரா நடிக்க மாட்டார், அவர் நடிக்கக் கூடாது என பிரபுதேவா கட்டளையிட்டிருக்கிறார், பாலகிருஷ்ணாவுடன் நடித்துவரும் ஸ்ரீராமராஜ்ஜியம்தான் அவரது கடைசிப் படம் என்றெல்லாம் எழுதியது.

இந்த செய்தியை தமிழக ஊடகங்களும் அப்படியே திருப்பி எழுதின. ஆனால் இதனை நயன்தாரா மறுத்துள்ளார். குறிப்பிட்ட பத்திரிகையில் வந்துள்ளவை அனைத்தும் கற்பனை என்று கூறியிருக்கும் அவர், திருமணத்துக்குப் பிறகு நான் நடிக்கக் கூடாது என்று பிரபுதேவா கூறவில்லை என தெரிவித்துள்ளார்.

அப்படியானால் நயன்தாரா திருமணத்துக்குப் பிறகும் நடிப்பாரா?

நயன்தாரா இன்னும் முடிவு செய்யவில்லையாம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.