
ரஜினியின் உடல்நிலை வேகமாக தேறி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவருக்கு சிகிச்சை அளிக்கும் மௌண்ட் எலிசபெத் மருத்துவமனை சார்பில் மருத்துவர்களோ, ரஜினியின் குடும்பத்தினரோ இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்தத் தகவலும் வெளியிடவில்லை.
சிங்கப்பூர் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவரும் ரஜினிக்கு டயாலிசிஸ் சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அவர் தனது அறையில் அரை மணி நேரம் தினமும் நடைப்பயிற்சி எடுத்துக் கொள்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்னும் பத்து தினங்கள் ரஜினி மருத்துவமனையில் தங்கியிருப்பார், டிஸ்சார்ஜ் ஆனாலும் சில வாரங்கள் அவர் சிங்கப்பூரிலேயே தங்கியிருந்து சிகச்சையும், ஓய்வும் எடுத்துக் கொள்வார் என அவருக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.