
அழகும், திறமையும் இருந்தும் திரும்பிப் பார்க்கப்படாத நடிகைகளில் மம்தா மோகன்தாஸும் ஒருவர். இவரைப் போன்றவர்களுக்கு அடைக்கலம் அளிப்பது மலையாள சினிமா. மம்தா மோகன்தாஸ் மலையாளத்தில் இப்போது பிஸி நடிகை.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருக்கு தமிழில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. உபயம் அருண் விஜய்யின் தடையற தாக்க.
இந்தப் படத்தில் முதலில் ஒப்பந்தமான பிராச்சி தேசாய் சொல்லாமல் கொள்ளாமல் மும்பைக்கு ஃபிளைட் ஏறினார். பின்லேடனையே பிடித்துவிட்டார்கள். பிராச்சி இன்னும் மாட்டவில்லை. அவர் மீது ஒரு வழக்கு போட்டுவிட்டு ராகுல் ப்ரீத் சிங் என்பவரை ஒப்பந்தம் செயதனர். படத்தில் இரு ஹீரோயின்கள். இரண்டாவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டவர்தான் மம்தா மோகன்தாஸ்.
மம்தாவுக்கு இந்தப் படம் மறு வாழ்வாக அமையட்டும்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.