![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFQg6NPvIINoidLeGVilmv4I7DglCn8eWAQehDge08PXuFhtHHFLY75O3zHIVMFnoU0wopBxeuqREbWbkDt4a0yL6GO6hZIt4MjySBb0Ek86bjdp1jlaW4YR0LR5j5LcswzTEBN1EsWRU/s320/Vikram+busy+in+Theivathirumagal+Promotion+hot+new+stills.jpg)
வந்திட்டு ஓடிட்டாரு என்று தெய்வத்திருமகளின் தெலுங்கு டப்பிங் உரிமையை வாங்கியவர்கள் புலம்பிக் கொண்டிருக்க, சென்னையில் தொடங்கிய ரசிகர்கள் சந்திப்பை தென் தமிழ்நாடு முழுக்க நடத்திக் கொண்டிருக்கிறார் விக்ரம்.
பல கோடி கொடுத்து இந்தப் படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை வாங்கினார்களாம். படத்தை புரமோட் செய்ய ஆந்திராவில் சில நாட்களாவது சீயான் இருப்பார் என்று எதிர்பார்த்திருக்கிறார்கள். ஆனால் ஹைதராபாத் சென்று ஒரே நாளில் திரும்பிவிட்டார். ஆந்திராவில் இருந்தால் அன்னை தமிழகத்தை யார் பார்ப்பது?
படம் வெளியான முதல்நாள் சென்னை ரசிகர்களை திரையரங்கில் சந்தித்த சீயான் திருச்சி சென்று ரசிகர்களை சந்தித்தார். தமிழகம் முழுக்க போகும் ஆவல் அவருக்கு இருக்கிறது. படப்பிடிப்பு தேதி அனுமதிக்குமா என்றுதான் தெரியவில்லை.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.