மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> நயன்தாரா இன்னும் பல சுவாரஸியமான செய்திகளை‌த் தருவாரா?

தன் மீதுள்ள காதலால் நடிப்பையே துறந்தவர் நயன்தாரா என்று உணர்ச்சிவசப்பட்டிருந்தார் பிரபுதேவா. அந்த‌க் காதலி மீண்டும் நடிக்கயிருப்பதாக செய்தி கசிந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

முதல் மனைவி ரமலத்தை பிரபுதேவா விவாகரத்து செய்த பிறகு உடனடியாக பிரபுதேவா நயன்தாரா திருமணம் நடக்கும் என்றே எண்ணியிருந்தனர். ஆனால் திருமணம் தள்ளிப் போனது. இந்நிலையில் பிரபுதேவா தனது குழந்தைகளை‌ச் சென்று சந்தித்துள்ளார். நயன்தாராவுக்கு தெ‌ரியாமல் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இதனால் கோபமான நயன்தாரா பிரபுதேவாவை தனது கேரள வீட்டில் அனுமதிக்கவில்லை.

ஆனால் இதனை நயன்தாரா மறுத்துள்ளார். பிரபுதேவாவுடன் ஒற்றுமையாக இருப்பதாக அவர் தெ‌ரிவித்துள்ளார். நயன்தாரா இப்படி கூறினாலும், குழந்தைகளுடன் உள்ள உறவை முறித்தால் மட்டுமே பிரபுதேவாவுடன் திருமணம் என்பதில் உறுதியாக இருப்பதாக நயன்தாராவுக்கு நெருக்கமானவர்கள் தெ‌ரிவிக்கிறார்கள். பிரபுதேவாவுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்காக அவர் மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதாகவும் தெ‌ரிவிக்கிறார்கள்.

நயன்தாரா இன்னும் பல சுவாரஸியமான செய்திகளை‌த் தருவார் என நம்பலாம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.