![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjds0ds_RTa2f5NuzfH6Bam_f_Nnv_EOYGN7EnmfISi6dx6bc_rgmxJM1cEuhhoShWrTdIbDHkaMKG60qwNgADPy2B8HLj1Zeh-iwMgt81gAn3qybRqZVRSCIqeFWws4kgqFRAT51uYomQ/s320/Ajith+Kumar+don%2527t+like+celebrations+for+100th+Day+Mankatha.jpg)
இப்போதெல்லாம் ஒரு படம் நாலு வாரங்கள் தாக்குப் பிடிப்பதே சிரமம். இதில் 100 நாட்கள் என்பது சரித்திரம். மங்காத்தா அந்த சரித்திரத்தை படைத்திருக்கிறது.
அதனை விழா எடுத்துக் கொண்டாட படத்தின் தயாரிப்பாளர் துரை தயாநிதி முதற்கொண்டு அனைவரும் விருப்பமாக உள்ளனர். ஆனால் அஜீத்தான் பிடிகொடுக்காமல் இருக்கிறார். ஆடியோ விழா, வெற்றிவிழா எதிலும் கலந்து கொள்ள மாட்டேன் என்று சொல்லிதான் படத்தில் நடிக்கவே ஒப்புக் கொள்வார் அஜீத். மங்காத்தாவும் விதிவிலக்கல்ல.
நாயகன் இல்லாமல் படத்தின் வெற்றிவிழாவை எப்படி நடத்துவது என விழாவை தள்ளிப் போட்டிருக்கிறார்கள். அஜீத்தின் ரசிகர்கள் அவரை அழைத்து வருவதாக இருந்தால் விழாவை நடத்தத் தயார் என அறிவித்திருக்கிறார் துரை தயாநிதி.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.