![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWOFqikuRPVW_d00v_daTPO776ffsqC6OZRhVOlrhiQleySyt68S0bx691H22n64-WsM_c2kgsXwJyjbevK-GtEWJCYxbIrgc3MkCQPEbymQLk6X87GGIYAF_rinMNUMSinZ3joAfLQxw/s400/Jeeva%252CSamantha%2527s-Neethane-En-Ponvasantham+Fefsi+Telugu+Fight+with+Kodambakkam+Tamil+Cinema+Directors.jpg)
வருகிற 9ஆம் தேதி வரை படப்பிடிப்புகள் ரத்து என பெப்சி அறிவித்துள்ளது. இந்தப் போராட்டம் பக்கத்து மாநிலங்களிலும் பற்றிக் கொண்டுள்ளது.
ஹைதராபாத்தில் நீதானே என் பொன்வசந்தம் படத்தின் தெலுங்கு பதிப்பை இயக்கி வந்தார் கௌதம். தெலுங்குப் பதிப்புதானே பாதிப்பில்லை என்று நினைத்திருந்த நேரத்தில் ஆந்திராவைச் சேர்ந்த பெப்சி தொழிலாளர்கள் படப்பிடிப்பை புறக்கணித்தனர். இது தெலுங்குப் படம் என்று கௌதம் விளக்கிக் கூறியதையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை. இதனால் படப்பிடிப்பு 9ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் இயக்குனர் என்பதால் அவரின் தெலுங்குப் படத்தையும் தொழிலாளர்கள் புறக்கணித்தது போராட்டத்தின் சூட்டை அதிகப்படுத்தியிருக்கிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.