
ஜான் ஆபிரஹாம், விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் இப்போது ராணா டகுபதி. பிபாஷாவின் குட்டி வாழ்க்கையில் அவர் காதலித்து கைவிட்ட அல்லது விடப்பட்ட காதலர்கள் இவர்கள். இதில் மூன்றாவதாக வரும் ராணாவின் பிரிவுதான் இப்போது பாலிவுட்டின் ஹாட் டாபிக்.
ராணா ராம்கோபால் வர்மாவின் படத்தில் நடிக்கிறார். சர்வதேசப் படமொன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இதற்கொல்லாம் காரணம் அவர் பிபாஷாவுடன் ஏற்படுத்திக் கொண்ட நட்புதான். அவர் மூலமாகவே பாலிவுட்டின் கவனம் ராணா மீது திரும்பியது என்கின்றன மும்பை மீடியாக்கள். முன்பு பிபாஷாவுடன் அடிக்கடி தென்பட்ட ராணா இப்போது பிபஷாவை கண்டு கொள்வதில்லை. இதற்கு காரணம் த்ரிஷாவுடன் அவருக்கு ஏற்பட்ட புதிய உறவுதான் என்று காரணமும் கண்டு பிடித்திருக்கிறார்கள்.
இது குறித்து பிபாஷாவிடம் கேட்டதற்கு சோகத்தில் பிழிந்த பதில் கிடைத்திருக்கிறது. நான் இப்போது தனியாகதான் இருக்கிறேன். யாரையும் காதலிக்கவில்லை. எனக்குப் பிடித்தவர்களுடன் வெளியே போகிறேன், டின்னர் சாப்பிடுகிறேன் என்று சுயம்வரத்துக்கு மாப்பிள்ளை கிடைக்காத இளவரசி குரலில் பதிலளித்துள்ளார்.
ராணா போனால் இன்னொரு ஆணா இல்லை... டோண்ட் வொர்ரி பிபாஷா.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.