மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> இன்று கோச்சடையான் நிலை என்ன ?

கோச்சடையான் என்ன நிலையில் இருக்கிறது என்பதை மணிரத்னம் படம் போல் துப்பறிய அவசியமில்லை. படத்தின் இயக்குனர் சௌந்தர்யா ஒவ்வொரு நாள் விசேஷங்களையும் இணையத்தில் ஏற்றிவிடுகிறார். நமக்கு வேலை எளிது.

கே.எஸ்.ரவிக்குமா‌ரின் மேற்பார்வையில் நடக்கும் இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் லண்டனில் நடந்தது. சரத்குமார், ர‌ஜினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இரண்டாவது ஷெட்யூல் கேரளாவில். கே.எஸ்.ரவிக்குமா‌ரின் மகள் திருமணம் முடிந்த பிறகு, அதாவது மே 3ஆம் தேதிக்குப் பிறகு இரண்டாவது ஷெட்யூல் ஆரம்பிக்கும் என்றார்கள். ஆனால் அதற்கு முன்பே அதாவது இன்றே இரண்டாவது ஷெட்யூலை‌த் தொடங்கியிருக்கிறார் சௌந்தர்யா.

கேரளாவில் நடக்கும் படப்பிடிப்பில் ர‌ஜினியுடன் சரத்குமார், ஆதி, தீபிகா படுகோன் ஆகியோரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.