மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> நயன்தாரா நட்சத்திர பேட்டி - காதல் பி‌ரிவு சொந்த விஷயம்.

எதையும் ஈஸியாக எடுத்துக் கொள்கிறவர் என்ற பெயர் த்‌ரிஷாவுக்கு உண்டு. இந்தப் பெயரை அவ‌ரிடமிருந்து தட்டிச் செல்வார் போலிருக்கிறது நயன்தாரா. காதல், பி‌ரிவு என்ற சென்சிடிவ் விஷயத்திலும் சென்டிமெண்டாக மூக்கை சிந்தாமல் சிந்தித்து வார்த்தைகளை டெலிவ‌ரி செய்கிறார். அவர் சொல்லும் விளக்கத்திலிருந்து பிரபுதேவாவுக்கும் இவருக்கும் இடையில் என்ன நடந்தது என்றே யூகிக்க முடியாமல் திணறுகிறது நிருபர்கள் வட்டாரம். உங்களால் ஏதாவது கெஸ் செய்ய முடிகிறதா பாருங்கள்.

பிரபுதேவாவுடனான காதல் முறிந்ததற்கு என்ன காரணம்?

என்னைப் பொறுத்தவரை காதலுக்காக எதையும் செய்ய‌த் தயாராக இருந்தேன். பல விஷயங்களை விட்டுக் கொடுத்தேன். ஆனாலும் திருமணம் வரை வந்த எங்கள் காதல் முறிந்துவிட்டது. எங்கள் விஷயத்தில் மட்டுமல்ல, எத்தனையோ பேர் விஷயத்தில் காதல் அல்லது திருமணம் முறிவது நடந்து கொண்டேதான் இருக்கிறது.

பரஸ்பர பு‌ரிதல் இன்மைதான் பி‌ரிவுக்கு காரணமா?

காதலிலும், திருமணத்திலும் ஒருவரையொருவர் பு‌ரிந்து கொள்ளாமல் இருப்பது இருக்கதான் செய்யும். அதனால் பிரச்சனைகளும் ஏற்படும். இது ஒரு கட்டுக்குள் இருந்தால் நல்லது. எல்லை தாண்டும் போது காதலானாலும் ச‌ரி, திருமணமானாலும் ச‌ரி முறியதான் செய்யும் என்னுடைய விஷயத்திலும் அதுதான் நடந்தது.

பிரிவுக்கான முக்கிய காரணம் எது?

சில விஷயங்களை என்னால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. பிரச்சனைகளை சமாளிக்க முடியவில்லை அல்லது தெ‌ரியவில்லைன்னு சொல்லலாம். உலகில் எதுவும் நிலையில்லை. மக்கள் முதல் செயல்பாடுகள் வரை எல்லாம் மாறுகின்றன. அப்படி ஒரு மாற்றம்தான் என்னை பி‌ரியச் செய்தது.

அந்த மாற்றம் என்ன?

என்னுடைய பி‌ரிவுக்கு பல காரணங்கள் இருக்கிறது. அது என் சொந்த விஷயம். அது பற்றி பேச நான் விரும்பவில்லை. என்னுடைய பர்சனல் விஷயத்தை உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.

இப்படி நடக்கும் என்று நினைத்தீர்களா?

அவருடனான காதல் இப்படி பாதியில் முறிந்துவிடும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் வாழ்க்கையில் எது வேண்டுமானாலும் நடக்கும் என்பதை இது உறுதிப்படுத்தியுள்ளது. காதாலானாலும் ச‌ரி, திருமணமானாலும் பு‌ரிந்து கொண்டு விட்டுக் கொடுத்தால் மட்டுமே நிலைத்து நிற்கும்.
இப்போது தனியாக உணர்கிறீர்களா?

மூன்றரை வருடங்கள் உடனிருந்தவர் பி‌ரியும் போது அப்படி ஒரு உணர்வு இல்லை என்று பொய் சொல்ல முடியாது. அதிலிருந்து நான் மீண்டு வர சில காலம் ஆகலாம்.

காதலைப் பற்றிய உங்கள் எண்ணம் இந்தப் பி‌ரிவுக்குப் பிறகு மாறிவிட்டதா?

இல்லை. காதல் அதனளவில் எப்போதும் உண்மையாகவே இருக்கிறது. காதலுக்காக எதையும் செய்ய நான் இப்போதும் தயாராகவே இருக்கிறேன். ஆனால் அந்தக் காதல் எதிர்தரப்பிடமும் இருக்க வேண்டும்.

பச்சை குத்திக் கொண்ட பிரபுதேவா பெயரை அழித்துவிட்டீர்களா?

அது பற்றியெல்லாம் நான் சிந்திக்கவேயில்லை. இதோ அந்தப் பச்சை அப்படியேதான் இருக்கிறது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.