![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVU1W4BkgONCfhqZTw0MP78JzS4yIOX5yelq-jjD9AseytBPfpB4J-8SakvB5T8sqJmpWB7NBkWUWtSG93YbBsKbrkcP7X9G0cjjxNAE9SQIvyuLX9GsDKXTa-Tvt-FN_Gn42pRLSAvRw/s400/Oru+Kal+Oru+Kannadi+movie+get+problems.jpg)
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துக்கு தடைகோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். இந்த வழக்கை தொடுத்தது இந்து தர்மா சக்தி என்ற அமைப்பின் செயலாளர் தேவசேனாதிபதி.
படத்தின் ட்ரெய்லரில் உளுந்தூர்பேட்டை உலகானந்தா என்ற பெயரில் ஒரு கேரக்டர் வருகிறதாம். இந்த காதாபாத்திரம் சாமியார்களை இழிவு செய்வது போல் அமைக்கப்பட்டுள்ளது, அதனால் இந்துக்கள் மனம் புண்படும். படத்துக்கு அளித்த சென்சார் சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்ற புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள சென்சார் போர்ட் அவர்கள் ட்ரெய்லரை பார்த்து இந்த குற்றச்சாற்றை வைத்துள்ளனர். நாங்கள் முழுப் படத்தையும் பார்த்து சான்றிதழ் அளித்துள்ளோம் என விளக்கம் அளித்துள்ளது.
இருதரப்பு விளக்கத்தையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.