மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> பகலவன் குறித்து வாய் திறக்காத விஜய்.

சீமான் இயக்கத்தில் விஜய் பகலவன் என்ற படத்தில் நடிக்கயிருப்பதாக பல மாதங்களாகச் சொல்லி வருவது அனைவருக்கும் தெ‌ரிந்திருக்கும். ஏன், அந்த விஷயம் மறந்தும்கூட போயிருக்கும். அந்த இத்துப்போன விஷயம் இப்போது மீண்டும் அச்சுக்கு வந்திருக்கிறது.

சீமான் பகலவன் படத்தை இயக்குகிறார். ஆனால் ஹீரோ விஜய் அல்ல. டைட் ஷெட்யூல் காரணமாக அவர் படத்தில் நடிக்கவில்லையாம். மீடியாக்களுக்கு தெ‌ரிந்த இந்த விஷயம் சீமானுக்கு இப்போதுதான் தெ‌ரிந்திருக்கிறது. பகலவனை தயா‌ரிப்பதாக இருந்த தாணுக்கு துப்பாக்கியை தயா‌ரிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் பகலவன் குறித்து அவர் வாயே திறக்கவில்லை. அதுதான் வட கிடைச்சிடுச்சே.

பகலவன் கதைக்கு ஆர்யா முதல் ‌ஜீவா வரை பலரு‌ம் பொருத்தமாக இருப்பார்கள் ஆனாலும் ‌ஜீவா கொஞ்சம் ஸ்பெஷல் என்று விசாலமான வலையாக வீசியிருக்கிறார் செந்தமிழன். மீன் சிக்குகிறதா பார்ப்போம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.