மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ப்ரியதர்ஷனும், சந்தோஷ் சிவனும் இணைகிறார்கள் இந்தியில் நாடோடிகள்.

பிரியதர்ஷன் இந்தியில் நாடோடிகள் படத்தை ரீமேக் செய்கிறார். இது பழைய செய்திதான். நண்பர்களைப் பற்றிய இந்தப் படம் பழைய நண்பர்கள் சிலரை மீண்டும் இணைத்திருக்கிறது.

17 ஆண்டுகளுக்கு முன் ப்ரியதர்ஷன் சுதந்திரப் போராட்டத்தை மையமாக வைத்து கலாபாணி என்ற படத்தை எடுத்தார். மோகன்லால், பிரபு நடித்திருந்த அந்தப் படம் தமிழில் சிறைச்சாலை என்ற பெயரில் வெளியானது. அந்தப் படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்தார். கலை இயக்கம் சாபு சிரில்.

அதன் பிறகு ப்ரியதர்ஷனும், சந்தோஷ் சிவனும் இணைந்து பணியாற்றவில்லை. இந்த நீண்ட இடைவெளியை இந்தி நாடோடிகள் தீர்த்து வைத்துள்ளது. இந்த ரீமேக்கிற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறhர். சாபு சிரில் கலை இயக்கம். ஜுன் இறுதியில் படப்பிடிப்பு தொடங்குகிறது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.