விஸ்வரூபம் படத்தை DTH-சில் வெளியிடுவதற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
ஏற்கனவே சென்னையில் கூடிய திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டத்தில் DTH-சில் விஸ்வரூபத்தை வெளியிட்டால் திரையரங்குகள் விஸ்வரூபத்தை புறக்கணிக்கும் என முடிவு செய்யப்பட்டது.
இன்று காலை மதுரையில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் நடந்தது. சங்க நிர்வாகிகளுடன் ஐம்பதுக்கும் மேற்பட்ட திரையரங்கு உரிமையாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.
DTH-சில் விஸ்வரூபம் என்றில்லை எந்தப் படம் திரையிட்டாலும் அப்படத்தை திரையரங்குகளில் வெளியிட மாட்டோம் என்று இக்கூட்டத்தில் ஒரே மனதாக முடிவு செய்யப்பட்டது.
தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் விநியோகஸ்தர்களில் ஒரு பகுதியினர் கமலின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். என்றாலும் திரையரங்கு உரிமையாளர்கள் தங்களது முடிவில் உறுதியாக இருப்பதால் விஸ்வரூபம் பிரச்சனை நாளுக்கு நாள் சிக்கலாகி வருகிறது.
கமல் இதனை எப்படி சமாளிக்கப் போகிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வி.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.