மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


மரணப்படுக்கையில் நெல்சன் மண்டேலா.

தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா மரணப்படுக்கையில் போராடி வருவதாக  அவரது மகள் மகஸிவி மண்டேலா தெரிவித்துள்ளார்.

மரணப்படுக்கையிலுள்ள நெல்சன் மண்டேலாவின் செயற்பாடுகள் முன்னரை விட குறைவடைந்து வருவதாகவும் அவர் கூறினார். 

நெல்சன் மண்டேலாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும்; அவர் உரையாடும்  சக்தியை இழந்திருந்ததாகவும்  ஏற்கெனவே செய்திகள் வெளியாகியிருந்தன. 

தொடர்ச்சியாக நுரையீரல் தொற்றுக்கு உள்ளான நிலையில்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  நெல்சன் மண்டேலா,  தனது 95ஆவது பிறந்தநாளான கடந்த ஜுலை மாதம் 18ஆம் திகதி  வைத்தியசாலையிலேயே கழித்திருந்தார். 

இதன் பின்னர்  நெல்சன் மண்டேலா வைத்தியசாலையிலிருந்து வெளியேறி  ஜோஹன்நெஸ்பேர்க்கிலுள்ள வீட்டுக்குச் சென்றிருந்தார். இந்த நிலையிலேயே உடல்நிலை  கவலைக்கிடமாக இருப்பதுடன், உரையாடும் சக்தியை இழந்திருந்ததாகவும் ஏற்கெனவே செய்திகள் வெளியாகியிருந்தன.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.