மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


பஸ்ஸில் மாணவியை படம்பிடித்தவருக்கு தக்க பாடம் புகட்டிய சக பயணிகள் கொட்டாவையில் சம்பவம்.

பஸ்ஸில் பயணித்த மாணவியை செல்போனில் ரகசியமாக படம் பிடித்த நபரொருவர் சக பயணிகளால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கொட்டாவையில் இருந்து மொரகஹேன நோக்கி பயணிக்கும் (129 இலக்கம்) பஸ்ஸிலே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

சந்தேக நபரை நையப்புடைத்த பொதுமக்கள் , அவரின் கழுத்தில் துஷ்பிரயோகக்காரர் என எழுதிய அட்டையை மாட்டி மின் கம்பமொன்றில் பொலிஸார் வரும் வரை கட்டிவைத்துள்ளனர். பதின்மூன்று வயதான பாடசாலை மாணவியொருவரையே குறித்த நபர் படம்பிடித்துள்ளார்.இவர் படம் பிடிப்பதை வேறு இரு மாணவர்களே கண்டுள்ளனர்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.