மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


நாடளாவிய ரீதியில் சர்வதேச வெள்ளைப் பிரம்பு தின நிகழ்வுகள் மற்றும் பல்வேறு விழிப்புணர்வு ஊர்வலங்கள்.

ஒக்டோபர் 15ஆம் திகதி சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினமாகும். வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில் பல்வேறு விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடைபெற்றன. பார்வையற்றவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வந்து அவர்களின் சமூக மேம்பாடு தொடர்பான சிந்தனைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லும் வகையில் இவை இடம்பெற்றன .

இதன் ஒரு நிகழ்வாக   இன்று  மட்டக்களப்பு - கல்லடி -நொச்சிமுனை தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை மாணவர்களும்  நிருவாகத்தினரும்  இணைந்து மட்டக்களப்பு லயன்ஸ் கழகம் அனுசரணையில்  சர்வதேச வெள்ளை பிரம்பு தின நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இதன் ஆரம்ப நிகழ்வாக மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் அருகாமையில் இருந்து   தரிசனம் பாடசாலை மாணவர்களும் நிறுவகத்தின் அங்கத்தவர்களும் லயன்ஸ் கழக உறுப்பினர்களும் பேரணியாக  கல்லடி உப்போடை துளசி மண்டபம் வரை சென்றதன் பின் அங்கு  தரிசனம் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில்  பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்திய சமூக சேவை சிறுவர் பராமரிப்பு செயலாளர் . கே .கருணாகரன் , சிறப்பு விருந்தினராக லயன் பிராந்திய தலைவர் கலாநிதி  வ .சந்திரா மகேந்திரநாதன், மட்டக்களப்பு லயன்ஸ் கழக தலைவர்  கே .செல்வராசா , தரிசனம் நிலைய தலைவர்  .எம் .தயானந்தன்  மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் , பாடசாலை மாணவர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
(நியூவற்றி‬ அமிர்தகழி நிருபர்)













Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.