
தொலைக்காட்சிகளில் ஒரு புதிய முயற்சிதான், இந்தியாவின் அடுத்த நடனப்புயலுக்கான தேடலான - உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சி. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கிய இந்த நிகழ்ச்சி ரசிகர்களை மிகவும் கவர்ந்த நிகழ்ச்சியாகும்.
யார் அடுத்த பிரபுதேவா போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான இளைஞர்களில் இறுதியாக நான்கு பேர் இறுதி சுற்றுக்கு தேர்வாகியுள்ளனர்.
தேர்வாகியுள்ள பிரேம் கோபால், செரிஃப், நந்தா மற்றும் மனோஜ் குமார் ஆகியோர் இறுதிப்போட்டியில் மோதுகின்றனர். தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் இதுபோன்ற ஒரு நடன நிகழ்ச்சி நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். இதில் பங்குபெறும் போட்டியாளர்கள் தங்களின் நடனங்களை தானே வடிவமைத்து ஆடுவதுதான் இதன் சிறப்பம்சமாகும்.
வரும் வெள்ளியன்று நடைபெறும் நேரடி இறுதிப்போட்டியில் நடனப்புயல் பிரபுதேவா கலந்துகொள்கிறார். போட்டியாளர்களின் நடனத்தை பார்க்கவும் 'அடுத்த பிரபு தேவா' யார் என்பதை அறிவிக்கவும் அவர் நேரில் வருகிறார்.

இறுதி சுற்றுப் போட்டியில் நான்கு போட்டியாளர்களும் இரண்டு கட்டமாக போட்டியிட உள்ளனர். முதல் சுற்றில் மேற்கத்திய நடனமும் இரண்டாம் சுற்றில் போட்டியாளர்களின் விருப்பத்திற்கும் நடனமாடுகின்றனர். உங்களில் யார் அடுத்த பிரபுதேவா போட்டியில் வெற்றி பெறும் நபருக்கும் இந்தியாவின் மைகேல் ஜாக்சனான பிரபுதேவாவிடம் இருந்து பட்டம் பெறுவதைத் தவிர ரூபாய் 10 லட்சம் பரிசுத் தொகையும் கிடைக்கப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் வெள்ளிக்கிழமை அதாவது ஜூன் 26ஆம் தேதி மாலை 6:30 மணியிலிருந்து அடுத்த பிரபுதேவாவுக்கான மகுடம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள Y.M.C.A வளாகத்தில் நடைபெறுகிறது. மிக பிரம்மாண்டமாக ஆயிரக்கணக்கான நேயர்களின் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி அரங்கேற உள்ளது. மேலும் இதனை விஜய் டிவியில் நேரடி ஒளிபரப்பும் செய்யப்படுகிறது.
இந்த நேரத்தில் மைக்கேல் ஜாக்சனின் மரணம் மிகுந்த வருத்தத்தை தருகிறது.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteநபர்களே நீங்களும் தர்ஷன் அவர்களை பணம் சம்பதிக்க வைக்க முடியும்
ReplyDeleteநீங்கள் செய்ய வேண்டியது அவருடைய வி*ள*ம்*ப*ர*ம்*க*ளி*ல் c**l**i**c**k இடவும்
இனிய நண்பன் ரவி