மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> தலைமை ஏற்கிறாராம் ரஜினி ? சரத் பதில்!

ஒவ்வொரு முறை நடிகர் சங்கம் தொடர்பான எந்த விழா அறிவிப்பாக இருந்தாலும், ரஜினி கலந்து கொள்வாரா என்று கேள்வி கேட்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள் பத்திரிகையாளர்கள். இந்த முறையும் அது நடந்தது. ஆனால் முன்பு போல் மழுப்பல் பதிலாக இல்லாமல், வருவார் என்று அழுத்தமாக சொல்லி ஆர்வத்தை கிளப்பினார் நடிகர் சங்க தலைவர் சரத்குமார். நடிகர் சங்கம் சார்பாக நடக்கும் நாடகவிழாவில் ரஜினி கலந்து கொள்வாரா என்ற கேள்விக்குதான் சரத்குமாரின் இந்த “வருவார்” பதில்.

நடிகர் சங்க வரலாற்றிலேயே முதன்முறையாக போட்டியின்றி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டது இதுவே முதல்முறை. இந்த தகவலை நிருபர்களிடம் பகிர்ந்து கொண்டார் சரத். நீண்டகாலமாக இழுபறியாக இருந்த பல விஷயங்கள் குறித்து ஆணித்தரமாக பதில் அளித்தார் அவர். நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டும் பணி இம்முறை முழுமையாக நிறைவேற்றப்படும். சினிமாவுக்கு நாடகம்தான் அடிப்படை. தெருக்கூத்திலிருந்து நாடகம், நாடகத்திலிருந்து சினிமா. சினிமாவிலிருந்து டி.வி. இப்போது மீண்டும் நாடகம் என்று சுழற்சி நடைபெறுகிறது. அதை வலியுறுத்தும் வகையில் ஆகஸ்ட் 15 ந் தேதி முதல், 23 ந் தேதி வரை நாடக விழா நடைபெற உள்ளது என்றார் நடிகர் சங்க தலைவர்.

இந்த நாடகத்திற்கு தலைமை ஏற்கிறாராம் ரஜினி.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.