மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> சினேகாவுக்கு ஆசிட் அடிப்பேன் என்ற மிரட்டல்

அதென்னவோ தெரியவில்லை. பரபரப்புக்கும் சினேகாவுக்கும் அப்படியொரு சங்கிலி பிணைப்பு. கடந்த சில தினங்களாக சினேகாவை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய டுபாக்கூர் ஒருவர் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறார். பெயர் ராகவேந்திரா. ஐயாயிரம் கோடிக்கு சொத்துகள் வைத்திருப்பதாக சினேகாவிடம் அளந்துவிட்டிருக்கிறார் மனிதர். (நிஜம் என்ன என்பதை காவல் துறையே புலனாயட்டும்) கடந்த ஆறு மாதங்களாக சினேகாவை நேரில் சந்தித்தும், எஸ்எம்எஸ் மூலமும் தனது காதலை வெளிப்படுத்தி வரும் அவர், ஒரு நாளைக்கு 100 க்கும் அதிகமான எஸ்எம்எஸ்களை அனுப்பி அவஸ்தைக்கு ஆளாக்கியிருக்கிறார். கொடுமை என்னவென்றால் என்னை கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்றால் முகத்தில் ஆசிட் அடிப்பேன் என்ற மிரட்டல் வேறு.

பொறுத்து பொறுத்து பார்த்த சினேகா, காவல் துறை ஆணையரிடம் நேரில் சென்று புகார் கொடுக்க, ராகவேந்திராவை ஒரே அமுக்! இப்போது சிறைக்கு பின்னால் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் இந்த காதல் மன்னர். “இப்பவும் நான் சினேகாவை காதலிக்கிறேன். எனக்கு எவ்வளவு துன்பம் கொடுத்தாலும், சிறையில் தள்ளினாலும் எல்லாவற்றையும் புன்னகையோடு ஏற்றுக் கொள்வேன். அவர் மனசில் இடம் பிடித்தால் போதும்” என்று பினாத்துகிறாராம் ராகவேந்திரா.

சினேகா என்ன சொல்கிறார்? “அவர் என்னை நேரில் சந்தித்தது ஆட்டோகிராப் இரண்டாம் பகுதியை எடுக்கலாம் என்றுதான். என் அப்பா சேரனிடம் அனுப்பி வைத்தார். ஆனால் இவர் நோக்கம் வேறு. படம் எடுப்பதற்காக வந்தவர் அல்ல என்பதை சேரனே எங்களிடம் கூறிவிட்டார். அதன்பின் என்னை சந்தித்த அவர், காதலிக்கிறேன் என்றும் கல்யாணம் செய்து கொள்கிறேன் என்றும் கூறினார். எனக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை என்ற பிறகும் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். நான் செல்போனை ஆஃப் செய்தாலும் மறுபடியும் ஆன் செய்தவுடன் லைனுக்கு வருவார். படப்பிடிப்புக்கு எங்கே போனாலும் அங்கேயும் என்னை ஃபாலோ செய்தார். பொறுக்க முடியாமல்தான் போலீசுக்கு போனேன்” என்கிறார்.

இந்த நேரத்தில் இன்னொரு டூபாக்கூர் நபரை பற்றியும் வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டும். லண்டனில் இருந்து இனியன் என்ற நபர் சினேகாவை தனது மனைவியாகவே பாவித்தும், கற்பனை செய்தும் ஒரு வலைப்பூவில் தொடர்ந்து எழுதி வருகிறார். (http://www.suhasinirocks.blogspot.com) இந்த பிளாக் தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பே சினேகாவுக்கு நெருக்கமான வட்டாரங்களுக்கு நாம் தெரிவித்தோம். அவர்களும் சினேகாவிடம் சொல்ல, கிறுக்கன் என்ற அளவிலேயே அவர் இந்த உளறல் பிளாக்கையும், இதில் எழுதுகிற நபரையும் கருதியதாக நமக்கு பதிலளிக்கப்பட்டது.

போகிற போக்கை பார்த்தால், அடுத்த ராகவேந்திராவாக மேற்படி நபர் மாறக்கூடும். ஆகவே சினேகா,

“எச்சரிக்கை ப்ளீஸ்....”
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.