
வடநாட்டில் புயலை கிளப்பிய இந்த சுயம்வரம் அப்படியே ரயிலேறி நம்ம ஊருக்கும் வந்திருக்கிறது. பல ஆண்டுகளாகவே மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கும் நடிகை ரம்பா, தனக்கான சுயம்வரத்திற்கு நாள் குறித்துவிட்டாராம்.
தன்னுடன் ஒரே நேரத்தில் கடையை போட்ட மீனா, சங்கவிக்கெல்லாம் கூட மாப்பிள்ளை கிடைத்துவிட்டார்கள். தனக்கு கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தில் ஒரு சுற்று இளைத்தே போய்விட்ட ரம்பா, வீட்டில் வாஸ்துபடி ஏராளமான மாற்றங்களை செய்தார். வாஸ்து செய்த மாயமோ, அல்லது அவரது சகோதரர் வாசு செய்த மாயமோ? இந்த சுயம்வரத்தை பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்ப முன் வந்திருக்கிறதாம்.
இதன் மூலம் கிடைக்கிற வருவாய் ஒரு பக்கம் இருக்கட்டும்... ரம்பாவின் வாடிய மனசுக்கு வான்மழையாய் வருவாரா அந்த ஒன் அண் ஒன்லி பர்சன்?
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.