
அசல் படப்பிடிப்புக்காக சிங்கப்பூர் சென்றிருந்த சமீரா ரெட்டி ஊருக்கு திரும்பிவிட்டார். வந்த சில நாட்களில் அவருக்கு சாதாரண காய்ச்சல். அவ்வளவுதான்... பன்றி காய்ச்சலாக இருக்குமோ என்று சந்தேகத்தை கொளுத்தி விட்டார்கள். எள் முனையளவு நெருப்பிருந்தால் போதும். எரிமலையாக்கி பார்க்கவென்றே ஒரு கும்பல் இருக்குமல்லவா? பன்றி காய்ச்சல் என்றே பரப்பி விட்டார்களாம்.
போன் கால்களில் ஆரம்பித்து, பொக்கேக்கள் வரைக்கும் பன்றி காய்ச்சல் பற்றியே விசாரிக்க, கன்றி போனது சமீராவின் முகம். நல்லவேளையாக ஜூரம் விட்டது அவருக்கு. பிரச்சனையும் விட்டது. இதற்கிடையில் அசல் படத்திற்காக சிங்கப்பூர்-மலேசியாவை சுற்றி வந்த யூனிட், சென்னை திரும்பிவிட்டது. மீண்டும் செப்டம்பர் முதல் வாரம்தான் மலேசியா கிளம்புகிறார்களாம்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.