
ஒருநாள் திடீரென்று பி.வாசுவுக்கே போன் அடித்த ரஜினி, சந்திரமுகி இரண்டாம் பாகத்திலே நடிப்பதில் எனக்கு சம்மதமில்லை என்று கூறிவிட்டாராம். எனக்காக காத்திருக்காமல் வேறு கதையை எடுக்கலாமே என்றும் ஐடியா கொடுத்திருப்பதாக தகவல். கூடவே இன்னும் ஒரு யோசனையும் கூறினாராம் சூப்பர் ஸ்டார்.
வளர்ந்து வருகிற ஒரு இளம் ஹீரோவையும், மம்முட்டி மாதிரி ஒரு பெரிய ஹீரோவையும் வைத்து படம் எடுக்கலாமே? என்பதுதான் அந்த யோசனை. எந்திரனுக்கு பிறகு தலைவர் வேறு ரூட்டில் பயணிப்பார் என்று கிசுகிசுக்கிறது அவருக்கு நெருக்கமான வட்டாரம். அதனால்தான் தனக்காக காத்திருக்கும் பி.வாசுவுக்கு ஒரு புது பாதையை காட்டியிருக்கிறார் அவர் என்றும் கிசுகிசுக்கிறார்கள்.
புத்துல கைய விட்டு புரளிய கிளப்புறதே பொழப்பா போச்சு சிலருக்கு...
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.