
வேறொன்றுமில்லை. படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கியிருப்பதுதான் இந்த அடிஷனல் பாட்டுக்கான காரணம். படத்தை பார்த்தவர்கள், இந்தி படத்தில் வருகிற ஒரு பாடல் இதில் மிஸ்ஸாகிவிட்டதே, என்ன காரணம் என்றார்களாம். வேறு வழியில்லாமல் அதையும் எடுத்துக் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறார் மோசர்பேர் தனஞ்செயன். பாரத்தை ஒருத்தர் தலையிலேயே ஏற்றினால் எப்படி என்ற பெரிய மனசோடு செலவான பதினாறு லட்சத்தில் பாதியை ஏற்றுக் கொண்டாராம் பரத்.
நெசமாவா? பரத் தரப்பில் விசாரித்தால், "தப்பு தப்பு என்கிறார்கள். அப்படியெல்லாம் பரத் எதுவும் கையிலிருந்து கொடுக்கவில்லை" என்றார்கள். ஷ§ட்டிங் முடிஞ்சு போச்சுன்னு நினைச்சிகிட்டு இருந்தவரிடம் போய் "அடிஷனலா ஒரு பாடல் எடுக்கப் போறோம். டேட்ஸ் வேணும்னு கேட்டதும் கொடுத்தார். தமன்னாவும் தன்னோட டைட் ஷெட்யூலில் டேட்ஸ் அட்ஜஸ்ட் பண்ணி கொடுத்தாங்க. இதிலே பணம் எங்கே வந்திச்சு?" என்கிறார்கள் மோசர்பேர் தரப்பில்.
பணத்தை யாரு கொடுத்தா என்ன? பாட்டு து£க்கலா வந்தா சரி...
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.