மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> மீடியாவிடம் கைய்யும் மெய்யும்மாய் சிக்கிய நயன் ,பிரபுதேவா ?

வர்ற தீபாவளி இவங்களுக்கு தலை தீபாவளியா இருக்குமோ? இருக்கிற பொழப்பையெல்லாம் விட்டுட்டு இந்த மேட்டர்லேயே பழியா கிடக்கிற தமிழ்சினிமா ரசிக பெருமக்களுக்கு.... நீங்க நினைக்கிற மாதிரி அது ஒன்ணும் அவ்வளவு சாதாரணமான விஷயமா தெரியலே மக்களா... நயன்தாராவும், பிரபுதேவாவும் நெருக்கமாக இருந்தாலும் எந்த விழாவுக்கும் ஒன்றாக வந்ததில்லை. ஆனால் கடந்த வாரம் மும்பையில் ஒரு தியேட்டரில் இருவரையும் ஒன்றாக பார்த்த மீடியா வூடு கட்டி அடித்துவிட்டது.

தான் இயக்கிய வான்ட்டட் படத்தின் முதல் காட்சியை பார்க்க மும்பைக்கு போயிருந்தார் பிரபுதேவா. கூடவே நயன்தாராவும். பிரிமியர் ஷோவில் எல்லாரும் வந்திருக்கும் போது நயன்தாராவும் இருந்திருந்தால் சிக்கல் இல்லை. ஆனால் இது பிரிமியர் இல்லை. தியேட்டர் ஷோ. அங்குதான் ஜோடியாக போனார்கள் இருவரும். இருவரையும் வழி மறித்துக் கொண்ட மீடியா, உங்களுக்கு கல்யாணம் ஆயிருச்சா? என்று கேள்வி எழுப்ப, நோ கமெண்ட்ஸ் என்று பதிலளித்தார் நயன்தாரா.

ஆனால் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டதாக தெலுங்கு, மற்றும் இந்தி படவுலகத்தில் கிசுகிசுக்கிறார்கள். இப்போதிருக்கும் சூழலில் அது சாத்தியமா? பிரபுதேவா முறைப்படி விவாகரத்து வாங்கிய பிறகுதானே திருமணம் செய்து கொள்ள முடியும்? இப்படி ஏராளமான கேள்விகள். இந்த விவகாரத்தில் பிரபுதேவாவுக்கு ஆதரவாக பலரும், அவரது மனைவி ரமலத் என்கிற லதாவுக்கு ஆதரவாக சிலரும் இருக்கிறார்கள். இவர்களுக்குள் பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதெல்லாம் ஒரு முடிவுக்கு வந்த பிறகுதான் இந்த காதல் கல்யாணத்தில் முடியுமா? அல்லது பாதியிலேயே புட்டுக் கொள்ளுமா என்று தெரியும்.

பார்க்கலாம்...
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.