
அட, விஷயத்தை கேட்டுட்டு வியாக்கியானம் பேசுங்க சாருன்னு சொல்லிட்டு அந்த செய்தியை எடுத்துவிட்டார் கோடம்பாக்கத்து முக்கிய ஆசாமி ஒருவர். கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் துவங்கிய எஸ்எம்எஸ் வதந்தி ஒன்று உலகம் முழுக்க ஒரு சில மணி நேரத்தில் பரவியது. எல்லா எஸ்எம்எஸ்சிலும் ஸ்ரேயா தற்கொலை முயற்சி என்று வெளியான தகவல்களால் திக்குமுக்காடி போனது சினிமா ஏரியா.
அந்த நேரம் பார்த்துதான் செல் போனை ஆஃப் செய்துவிட்டு ஜம்மென்று ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருந்தார் அந்த திம்சுகட்ட மீனு. இப்படி ஒரு செய்தி வந்ததை பின்னாடி அறிஞ்சதும் ஷாக் ஆயிருப்பாரே? அட, போங்க சாரு. செய்தியை பரப்பி விட்டதே அவருதானே என்றார் அந்த சினிமா புள்ளி. எதுக்காகவாம்? நம்ம மேல மற்றவங்க எவ்வளவு அஃபெக்ஷன் வச்சிருக்காங்கன்னு பார்க்க நினைச்சுதாம் பொண்ணு. அதான், வேற ஒன்ணுமில்லேங்கிறாங்க.
அழகை காட்டி கிறுக்கனுங்களாக்கியது போதாதுன்னு இது வேறயா?
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.