
வட இந்திய இந்தி சானல் ஒன்று நடத்தயிருக்கும் டாக் ஷோவின் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணியாற்ற ஒப்புக் கொண்டிருக்கிறார் இவர். சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஏனிந்த முடிவு? காரணங்கள் மூன்று.
தமிழில்தான் தொலைக்காட்சியில் தோன்றுவது கவுரவ குறைச்சலாக பார்க்கப்படுகிறது. சல்மான்கான் முதல் ஷாருக்கான் வரை பல முன்னணி நடிகர்கள் சினிமாவில் நடித்துக் கொண்டே தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்கள். அங்கு அது கவுரவ அடையாளம்.
இரண்டாவது காரணம், ஜெனிலியாவை வைத்து தொடர்ந்து படம் பண்ணும் நிறுவனம்தான் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது.
மூன்றாவது காரணம், இந்த நிகழ்ச்சிக்காக அவருக்கு வழங்கப்பட உள்ள மெகா சம்பளம். இந்த மூன்று காரணங்கள் இருந்தால் நாங்களும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தயார் என்கிறார்கள் இங்குள்ள நடிகைகள். சம்பந்தப்பட்டவர்களுக்கு இது கேட்கிறதா?
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.