Saturday, October 31, 2009

> குருவுக்கு குரல் கொடுத்த கமல்

கமல்ஹாசன் ரெட்டைச்சுழி படத்துக்காக ஒரு பாடல் பாட இருக்கிறார். இதுதான் ஷங்கர் அலுவலகத்தை வலம் வரும் லேட்டஸ்ட் செய்தி.

தாமிரா இயக்கும் ரெட்டைச்சுழியில் பாலசந்தர், பாரதிராஜா இருவரும் இணைந்து நடிக்கின்றனர். படத்தில் இருவருக்கும் பாடல் காட்சிகளும் உண்டு. இதில் ஒன்று பாலசந்தர் பாடுவதாக வரும் பேத்தா ஸாங்.

இந்தப் பாடலை கமல் பாடினால் நன்றாக இருக்கும் என்பது இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா, இயக்குனர் தாமிரா ஆகியோ‌ரின் விருப்பம். விஷயம் கமலின் காதுகளுக்குப் போய் அவரும் சம்மதம் தெ‌ரிவித்திருக்கிறார்.

தனது அடுத்தப் படத்தின் வேலைகளுக்காக ஹாலிவுட் சென்றிருக்கும் கமல், நவம்பர் முதல் வாரத்தில் சென்னை திரும்புகிறார். அவர் வந்தவுடன் பாடல் பதிவு இருக்குமாம்.

கார்த்திக் ராஜா இசையில் இதற்குமுன் அ‌ஜித்துக்கு குரல் கொடுத்திருக்கிறார் கமல் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்.

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.