Wednesday, October 14, 2009

> பிரபுதேவா இயக்கத்தில் ஜெயம் ரவி

இந்திப் படவுலகின் வான்டட் லிஸ்டில் சேர்ந்திருக்கிறார் பிரபுதேவா. இவரது இயக்கத்தில் சல்மான் நடித்த வான்டட் இன்னும் வசூலில் பட்டையை‌க் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

இந்திப் படங்களை இயக்க வாய்ப்புகள் வ‌ரிசைகட்டி நின்றாலும், பிரபுதேவா அடுத்து இயக்கப் போவது ஒரு தமிழ்ப் படத்தை என்கிறார்கள். அந்தப் படத்தை தயா‌ரிப்பவர் ஏ‌ஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் கல்பாத்தி எஸ் அகோரம்.

இவரது தயா‌ரிப்பில் விஷால் நடிக்கும் படத்தை பிரபுதேவா இயக்குவதாக‌த்தான் முதலில் கூறப்பட்டது. விஷால் பாலா இயக்கும் படத்துக்கு கால்ஷீட் கொடுத்துள்ளதால் அவருக்கு பதில் ஜெயம் ரவியை ஒப்பந்தம் செய்யவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன.

ஜெயம் ரவி தெலுங்கு கிக் படத்தின் ‌‌ரீமேக்கான தில்லாலங்கடியில் தற்போது நடித்து வருகிறார். அடுத்து அமீ‌ரின் கண்ணபிரானில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.