
இந்திப் படங்களை இயக்க வாய்ப்புகள் வரிசைகட்டி நின்றாலும், பிரபுதேவா அடுத்து இயக்கப் போவது ஒரு தமிழ்ப் படத்தை என்கிறார்கள். அந்தப் படத்தை தயாரிப்பவர் ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் கல்பாத்தி எஸ் அகோரம்.
இவரது தயாரிப்பில் விஷால் நடிக்கும் படத்தை பிரபுதேவா இயக்குவதாகத்தான் முதலில் கூறப்பட்டது. விஷால் பாலா இயக்கும் படத்துக்கு கால்ஷீட் கொடுத்துள்ளதால் அவருக்கு பதில் ஜெயம் ரவியை ஒப்பந்தம் செய்யவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜெயம் ரவி தெலுங்கு கிக் படத்தின் ரீமேக்கான தில்லாலங்கடியில் தற்போது நடித்து வருகிறார். அடுத்து அமீரின் கண்ணபிரானில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.