மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> கமலுக்கு வில்லனாக வேண்டும்

உன்னைப்போல் ஒருவனில் போலீஸ் அதிகா‌ரியாக நடித்தவர் பிரேம்குமார். தெலுங்கு ஈநாடு படத்திலும் இவர் நடித்திருந்தார்.

தமிழில் மோகன்லாலுடனும், தெலுங்கில் வெங்கடேஷுடனும் நடித்தது மறக்க முடியாத அனுபவம் என்கிறார் பிரேம். கமலின் தீவிர ரசிகரான இவரது ஆசை என்ன தெ‌ரியுமா? கமலுக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்பதுதான்.

கமல் படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைப்பதைவிட வில்லனாக வாய்ப்பு கிடைத்தால் அதிக சந்தோஷமடைவேன். கமலுடன் நேருக்கு நேர் மோதும் போதுதான் நம் திறமை வெளிப்படும் என்பது பிரேமின் நம்பிக்கை.

உன்னைப்போல் ஒருவனில் கமல் இவரது நடிப்பைப் பார்த்து பாராட்டியிருக்கிறார். புல்ல‌ரித்துபோய் சொல்கிறார் பிரேம். நியாயமான சந்தோஷம்தான்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.