Wednesday, October 14, 2009

> கமலுக்கு வில்லனாக வேண்டும்

உன்னைப்போல் ஒருவனில் போலீஸ் அதிகா‌ரியாக நடித்தவர் பிரேம்குமார். தெலுங்கு ஈநாடு படத்திலும் இவர் நடித்திருந்தார்.

தமிழில் மோகன்லாலுடனும், தெலுங்கில் வெங்கடேஷுடனும் நடித்தது மறக்க முடியாத அனுபவம் என்கிறார் பிரேம். கமலின் தீவிர ரசிகரான இவரது ஆசை என்ன தெ‌ரியுமா? கமலுக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்பதுதான்.

கமல் படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைப்பதைவிட வில்லனாக வாய்ப்பு கிடைத்தால் அதிக சந்தோஷமடைவேன். கமலுடன் நேருக்கு நேர் மோதும் போதுதான் நம் திறமை வெளிப்படும் என்பது பிரேமின் நம்பிக்கை.

உன்னைப்போல் ஒருவனில் கமல் இவரது நடிப்பைப் பார்த்து பாராட்டியிருக்கிறார். புல்ல‌ரித்துபோய் சொல்கிறார் பிரேம். நியாயமான சந்தோஷம்தான்.

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.