
இந்தப் படத்தில் ரிஷி கபூரின் மகன் ரன்பீர் கபூர் நடிக்கிறார். ஹீரோயின் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.
ராவண் படத்தைப் போல இந்தப் படத்தையும் தமிழ், இந்தி இரு மொழிகளிலும் எடுக்க விரும்புகிறாராம் மணிரத்னம். தமிழில் ரன்பீர் கபூர் வேடத்தில் நடிக்க நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதமை அவர் தேர்வு செய்திருப்பதாக தெரிவிக்கிறார்கள்.
தனது மகனை நடிகனாக்க வேண்டும் என்ற தீராத விருப்பம் கார்த்திக்குக்கு. ஆனால் அவரது மனைவிக்கு இதில் விருப்பமில்லை. கௌதமின் திரைப்பிரவேசம் தள்ளிப்போக இதுவே காரணம். மணிரத்னம் படம் என்பதால் அவரும் சம்மதம் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.