Tuesday, January 26, 2010

> சூடேற்றும் கோவா

கோவா படத்துக்கு ஏ முத்திரை குத்தி சான்றிதழ் வழங்கியதால் கலக்கத்தில் இருக்கின்றனர் கோவா டீம். ஆனாலும் இது அனைவராலும் பார்க்கும் படமாக இருக்கும் என்கிறார் இப்பட இயக்குனர் வெங்கட்பிரபு.

கிராமத்தில் வசிக்கும் நான்கு இளைஞர்கள் வெளிநாட்டுப் பெண்களை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என லட்சியத்துடன் கோவா செல்கிறார்கள். அங்கே என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

கோவா கடற்கரை காட்சிகளை சுடச்சுட சுட்டுத்தள்ளிக் கொண்டு வந்திருப்பதுடன், இளைஞர்கள் குடித்துவிட்டு கூத்தடிக்கும் பல காட்சிகள் கொஞ்சம் அப்படியும் இப்படியுமாக இருந்ததால்தான் இந்த ஏ முத்திரையாம். எப்படியோ படத்துக்கு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டார்கள் என்பது உண்மை.

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.