Wednesday, January 6, 2010

> ர‌ஜினியின் க‌ரிசனம் ரசிகர்களுக்கு

யாரும் யோசிக்காததை அதிரடியாக‌ச் செய்வது ர‌ஜினி ஸ்டைல். சமீபத்தில் நாம் கேள்விப்பட்ட விஷயமும் அப்படிதான் இருக்கிறது.

ர‌ஜினி சென்னையில் இருந்தால் அவரது வாசஸ்தலம் பெரும்பாலும் கேளம்பாக்கம் பண்ணை வீடாகவே இருக்கும். அமைதி சூழ்ந்த இந்த பண்ணை வீட்டில்தான் அவர் ஓய்வு எடுப்பது வழக்கம். முக்கியஸ்தர்கள் சந்திப்பும் இங்குதான் நடைபெறும்.

இந்த பண்ணை வீட்டைச் சுற்றியுள்ள இடத்தை ர‌ஜினி வாங்கியிருக்கிறார். அவருக்காக இல்லை, அவரது ரசிகர்களுக்காக.

தனது மன்றங்களைச் சேர்ந்த 32 நிர்வாகிகளுக்கு ஆளுக்கு அரை கிரவுண்ட் என்று பி‌ரித்துக் கொடுக்கப் போகிறாராம். சும்மாயில்லை, அரை கிரவுண்டில் ஆளுக்கொரு வீட்டுடன். இந்த வீட்டின் கட்டுமான பணி செலவு முழுக்க ர‌ஜினியுடையது. நெகிழ்ந்து போயிருக்கிறார்கள் ரசிகர்கள்.

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.