மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ரஜினி எந்திரன் படப்பிடிப்புக்குத் தடை

ரஜினி, ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடிக்கும் எந்திரன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. புதிதாக ஓரிரு சீன்கள் எடுத்து இணைக்க இயக்குனர் ஷங்கர் விரும்பினார். இதற்கான படப்பிடிப்பை டெல்லியில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கான இடமும் அங்கு தேர்வு செய்யப்பட்டது.

படப்பிடிப்புக்கு போலீஸ் அனுமதி கேட்டனர். மனுவை ஆய்வு செய்த போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் படப்பிடிப்பில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தவிர்க்க தடை போட்டதாக கூறப்படுகிறது. டெல்லிக்கு பயணமாக தயாராக இருந்த ரஜினி, ஐஸ்வர்யாராய்க்கு கடைசி நேரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. பயணத்தை ரத்து செய்து விட்டனர். டெல்லிக்கு பதில் வேறு எங்கு படப்பிடிப்பை நடத்தலாம் என்று ஷங்கர் ஆலோசித்து வருகிறார்.

எந்திரன் படம் ஜூலை மாதம் ரிலீசாகும் என்று ரஜினி கூறியுள்ளார். மெகா பட்ஜெட்டில் இப்படம் தயாராகிறது. படத்தில் ஒரு பகுதியை 3 டியில் உருவாக்க ஏற்பாடு நடப்பதாக ஷங்கர் தெரிவித்தார்.

கோவா, புனே, ஐதராபாத், போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. சென்னையில் என்ஜினீயரிங் கல்லூரிகளிலும், கம்ப்யூட்டர் சாப்ட்வேர் நிறுவனங்களிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டு உள்ளது. ஒரு பாடல் காட்சி மட்டும் பாக்கி உள்ளது.

அதிநவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இப்படத்தை ஒரு எடுக்கின்றனர். எந்திரன், விஞ்ஞானி என இரு கெட்டப்பில் ரஜினி நடிக்கிறார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.