
ஹீரோவான பிறகு சுந்தர் சி. படம் எதுவும் இயக்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மனைவி குஷ்புவின் தயாரிப்பில் தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி நடிக்க உள்ளார்.
இயக்குனர், ஹீரோவுடன் இவரது ஆசை அடங்கும்போல தெரியவில்லை. குரு சிஷ்யன் படத்தில் ஒரு பாடலையும் பாடியிருக்கிறார். ஷக்தி சிதம்பரம் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ஸ்ருதியாக பெயர் மாறியிருக்கும் இந்திரவிழா ஹேமமாலினி சுந்தர் சி.க்கு ஜோடியாக நடித்துள்ளார்.
தினா இசையில் சுந்தர் சி. பாடியிருக்கும் பாடல், சுப்பையா சுப்பையா நீ செய்யுறது தப்பையா... என்று தொடங்குகிறது. (ஆ, எத்தனை உண்மையான வரிகள்).
சுந்தர் சி.யுடன் சத்யராஜும் இணைந்து பாடியிருக்கிறாராம். என்ன கொடுமை தினா சார் இது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.