சௌந்தர்யாவின் ஆக்கர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கௌதம் ஒரு படம் இயக்குவதாக பல வருடங்களுக்கு முன்பே பேசப்பட்டது. சுல்தான் தி வாரியர் படத்தின் தாமதத்தால் தள்ளிப்போன அந்த புராஜெக்ட் வெகு விரைவில் தொடங்கப்பட உள்ளது.ஆக்கர் பிக்சர்ஸ் சுல்தான் தி வாரியரை முதலில் தொடங்கினாலும் இரண்டாவதாக தொடங்கப்பட்ட கோவாதான் முதலில் வெளிவந்தது.
சுல்தானை விரைந்து முடிக்கும் பணியில் பிஸியாக இருக்கும் ஆக்கர் நிறுவனம் மூன்றாவது படத்தை இந்த வருட இறுதியில் தொடங்குகிறது. இதனை இயக்குகிறவர் கௌதம்.
அஜித்தின் ஐம்பதாவது படத்தை கௌதம் இயக்குகிறார். தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இதையடுத்து கௌதம் ஆக்கர் பிக்சர் தயாரிக்கும் படத்தை இயக்குகிறார்.
நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால் இசை கண்டிப்பாக ஹாரிஸ் கிடையாது என்பதை மட்டும் கௌதம் தெளிவுப்படுத்தியுள்ளார்.













1 நான் சம்பாதிச்சது:
"உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி"
என்று subtitle வைத்துக்கொண்டு வெறும் சினிமா செய்திகள் மட்டும் உள்ளது இதுதான் தமிழ் வளர்க்கும் முறையா ?
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.