Sunday, March 21, 2010

> சூர்யாவின் மனைவியாகும் ப்‌ரியாமணி

சூர்யாவின் மனைவியாக நடிக்கிறார் ப்‌ரியாமணி. இவர்கள் முதல் முறையாக இணைந்து நடிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகிறது.

ராம்கோபால் வர்மா ஆந்திராவின் அரசியல் ரவுடி ப‌ரி‌ட்டால ரவியின் கதையை படமாக்குகிறார். ப‌‌ரி‌ட்டால ரவியாக விவேக் ஓபராயும், அவரது கூட்டாளி சூ‌ரியாக சூர்யாவும் நடிக்கின்றனர். ரக்த ச‌ரித்ரா என்று பெய‌ரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.

இந்தப் படத்தில் சூ‌ரியின் மனைவி பானுமதி வேடத்தில் ப்‌ரியாமணி நடிக்கிறார். அதாவது சூர்யாவின் மனைவியாக ரக்த ச‌ரித்ராவில் நடிக்கிறார் ப்‌ரியாமணி. இவர்கள் இணைந்து நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சூர்யா நடிக்கும் முதல் தெலுங்கு மற்றும் இந்திப் படம் இது என்பதும் முக்கியமானது.

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.