சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சுல்தான் தி வாரியர் படப்பிடிப்பு தொடங்குகிறது. அதற்குமுன் தனது மகளும் சுல்தான் தி வாரியர் படத்தின் இயக்குனருமான சௌந்தர்யாவுடன் ஏ.ஆர்.ரஹ்மானை நேரில் சந்தித்துள்ளார் ரஜினி. படத்தின் பாடல்கள் குறித்து பேசியதுடன் அதனை விரைவாக முடித்துத்தர இந்த சந்திப்பில் ரஹ்மானிடம் கேட்டுக் கொண்டாராம் ரஜினி.சுல்தான் தி வாரியரில் அனிமேஷன் ரஜினியுடன் நிஜ ரஜினியும் சில காட்சிகளில் தோன்றுகிறார். படம் தொடங்கிய போது இப்படியொரு ஐடியா சௌந்தர்யாவிடம் இல்லை. அனிமேஷன் ரஜினியை மட்டும் காட்டினால் பொம்மைப் படம் என்று ரசிகர்கள் நினைத்து ஒதுக்கிவிடுவார்களோ என்ற அச்சத்தில் எடுக்கப்பட்ட முடிவாம் இது.
ஆனிமேஷன் ரஜினி, நிஜ ரஜினியுடன் இன்னொரு ரஜினியும் (யார்ரா அது?)இந்தப் படத்தில் இருக்கிறாராம். அந்த ரஜினி யார் என்பது படம் வெளியாகும் வரை ரகசியம் என படத்தின் டெம்போவை ஏற்றியிருக்கிறார் சௌந்தர்யா.
ரஜினியை வைத்தே கஜானாவை நிரப்பிடுவாங்க.





0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.