மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> சசிகுமார் - சமுத்திரக்கனி இயக்கத்தில்

விக்ரம் தயா‌ரிப்பில் புதுப்படம் இயக்கி வருகிறார் சசிகுமார். இந்தப் படத்தில் அவர் நடிக்கவில்லை. ஒரு காட்சியிலாவது தலைகாட்டுங்கள் என்ற நலம்விரும்பிகளின் வேண்டுகோளையும் கறாராக மறுத்துள்ளார்.

தனது இயக்கத்தில் நடிக்கவில்லை என்றாலும், தனது நண்பர் சமுத்திரக்கனியின் புதிய படத்தில் சசிகுமார்தான் ஹீரோ. நாடோடிகள் போல இதுவும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகிறது. ஜூலையில் படப்பிடிப்பை தொடங்க இந்த இயக்குனர்கள் முடிவு செய்துள்ளனர்.

தெலுங்கில் நாடோடிகள் படத்தை இயக்கிய சமுத்திரக்கனி அடுத்து நடிகர் பிரபாஸ் நடிக்கும் தமிழ்ப் படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது. அந்த புராஜெக்ட் என்னவானது? அவ‌ரிடம் கேட்டதற்கு, பிரபாஸ் நடிக்கும் படம் டிராப்பாகவில்லை, சசிகுமார் ஹீரோவாக நடிக்கும் படத்தை அடுத்து பிரபாஸ் நடிக்கும் படத்தை இயக்குகிறேன். தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் அது தயாராகும் என்றார்.

சசிகுமார் இயக்கிவரும் புதிய படத்தில் சமுத்திரக்கனி முக்கியமான வேடத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.