
தனது இயக்கத்தில் நடிக்கவில்லை என்றாலும், தனது நண்பர் சமுத்திரக்கனியின் புதிய படத்தில் சசிகுமார்தான் ஹீரோ. நாடோடிகள் போல இதுவும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகிறது. ஜூலையில் படப்பிடிப்பை தொடங்க இந்த இயக்குனர்கள் முடிவு செய்துள்ளனர்.
தெலுங்கில் நாடோடிகள் படத்தை இயக்கிய சமுத்திரக்கனி அடுத்து நடிகர் பிரபாஸ் நடிக்கும் தமிழ்ப் படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது. அந்த புராஜெக்ட் என்னவானது? அவரிடம் கேட்டதற்கு, பிரபாஸ் நடிக்கும் படம் டிராப்பாகவில்லை, சசிகுமார் ஹீரோவாக நடிக்கும் படத்தை அடுத்து பிரபாஸ் நடிக்கும் படத்தை இயக்குகிறேன். தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் அது தயாராகும் என்றார்.
சசிகுமார் இயக்கிவரும் புதிய படத்தில் சமுத்திரக்கனி முக்கியமான வேடத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.